search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி"

    துணை ராணுவ படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக அரசியல் கட்சிகள், பாகிஸ்தானுக்கு இந்திய அரசு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். #TNPolitical #JammuKashmir #CRPF
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் இந்திய துணை ராணுவப்படையினரின் வாகன அணி வகுப்பு மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. கொல்லப்பட்ட வீரர்களில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் துயரத்தையும், வேதனையையும் தருகிறது.

    இந்தியாவில் அமைதியை சீர்குலைக்கவும், குழப்பத்தை ஏற்படுத்தவும் முயன்றதற்காக பாகிஸ்தானுக்கு பல்வேறு தருணங்களில் இந்திய படைகள் பாடம் புகட்டியுள்ளன. அதற்கு பிறகும் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்களை பாகிஸ்தான் ஊக்குவித்து வருவது கண்டிக்கத்தக்கது.

    இனி வரும் காலங்களில் இத்தகைய தாக்குதல்கள் நடக்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, இனி வரும் காலங்களில் இதுபோன்ற தாக்குதல்களை நடத்துவது குறித்தோ, ஊக்குவிப்பது குறித்தோ நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு பாகிஸ்தானுக்கு ராணுவ அளவிலும், ராஜிய அளவிலும் கடுமையான பாடம் புகட்டப்பட வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 5 ஆண்டுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் இல்லை என்று ராணுவ மந்திரி சொல்லிவந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவு ராணுவத்திற்கு 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் நிலையில், நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களின் பாதுகாப்பையும் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

    பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு அழிக்க மத்திய அரசு தயங்கக்கூடாது. மத்திய அரசின் முயற்சிக்கு இந்த தேசமே எழுந்து வந்து உறுதுணையாக இருக்க வேண்டும். பயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இந்த தாக்குதல் கண்டிக்கத்தக்கது’ என்று கூறியுள்ளார்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த துணை ராணுவப்படை வீரர்கள் சுப்பிரமணியன் மற்றும் சிவசந்திரன் ஆகியோர் உள்பட 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனைக்குரியது. வருத்தம் அளிக்கிறது. இச்செய்தி நாடு முழுவதும் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலை த.மா.கா வன்மையாக கண்டிக்கிறது. இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை உடனடியாக கண்டுபிடித்து அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமை. பயங்கரவாதத்தை முறியடிக்க வேண்டிய அனைத்து முயற்சிகளிலும் மத்திய அரசு ஈடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேசம் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவப்படையினர் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிர்தியாகம் செய்திருப்பதற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. பயங்கரவாதத்தை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் அழித்தொழிக்க வேண்டிய தருணம் இது. இந்த தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாத அமைப்பையும், அதில் ஈடுபட்டவர்களையும் ஒட்டுமொத்தமாக அழிக்க வேண்டிய தருணம் இது.

    பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க, இந்திய ராணுவம் முன் வரவேண்டும். இந்து முன்னணி, தமிழக முழுவதும் கோவில்களில் மோட்ச தீபம் ஏற்றி பலியான வீரர்களின் ஆன்மா நற்கதியடை பிரார்த்தனை செய்ய இருக்கிறது. மேலும் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ், ‘வீரம் நிறைந்த நம் படைவீரர்களின் உயிர் வீணாக்கப்பட்டது. இதுபோன்ற கோழைத்தனமான செயல் செய்வோரை உறுதியோடும், கண்டிப்போடும் கையாள வேண்டும். முடிவெடுப்பதில் உள்ள குறைபாட்டினால் நம் நாடு பெரும் விலை கொடுத்து வருகிறது’ என்றார். #TNPolitical #JammuKashmir #CRPF
    வயது முதிர்வால் என்னால் துப்பாக்கியை தூக்க முடியாது. ஆனால் தேவைப்பட்டால் வீரர்களுக்கு உதவியாக ராணுவ வாகனம் ஓட்ட முடியும் என மருத்துவமனையில் ஹசாரே கூறினார். #JammuKashmir #CRPF #AnnaHazare

    சமூக ஆர்வலர் மற்றும் காந்தியவாதியான கிசன் பாபுராவ் ஹசாரே, அனைவராலும் அன்னா என அழைக்கப்பட்டு அன்னா ஹசாரே என அறியப்பட்டார்.  அவர் மத்தியில் லோக்பால் மற்றும் மராட்டியத்தில் லோக்ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஜனவரி 30ந்தேதி தனது சொந்த கிராமமான அகமதுநகர் மாவட்டம் ராலேகான் சித்தியில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.  

    அதன்பின் மராட்டிய முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார். ஆனால் உண்ணாவிரத போராட்டத்தால் அவரது உடல் நிலை மிகவும் மோசமாகி சுமார் 5 கிலோ வரை  உடல் எடை குறைந்திருந்தார்.

    இதனால் மகாராஷ்டிராவின் அகமதுநகரில் உள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    ராணுவ வாகன ஓட்டுனராக பணிபுரிந்தவரான ஹசாரே, தீவிரவாத தாக்குதல் பற்றி அறிந்தவுடன் கூறும்பொழுது, வயது முதிர்வால் என்னால் துப்பாக்கியை தூக்க முடியாது.  ஆனால் தேவை ஏற்பட்டால், நாட்டுக்காக போரிடும் நம்முடைய ராணுவ வீரர்களுக்கு பொருட்களை கொண்டு செல்வதற்கான வாகனம் ஓட்ட என்னால் முடியும் என கூறியுள்ளார்.

    கடந்த 1960ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த ஹசாரே அங்கு ராணுவ வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார்.  அதன்பின் கடந்த 1965ம் ஆண்டு நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போரில் கேம் கரன் பிரிவில் பணியாற்றி உள்ளார்.#JammuKashmir #CRPF #AnnaHazare
    தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ரெயில்வே ஊழியர் கைது செய்யப்பட்டார். #JammuKashmir #CRPF #RailwayEmployee
    புனே:

    காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் (மத்திய ஆயுதப்படை போலீசார்) 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறையில் சென்றிருந்தனர். அவர்கள் அனைவரும் விடுமுறை முடிந்த நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு ஜம்முவில் இருந்து 78 வாகனங்களில் பள்ளத்தாக்கு பகுதிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். பாதுகாப்புக்கு கவச வாகனங்கள் உடன் சென்றன. மாலை 6 மணிக்குள் அவர்கள் சென்றடைய திட்டமிட்டிருந்தனர்.

    அவர்களது வாகனங்கள், ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புல்வாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன.

    அப்போது பயங்கரவாதி ஒருவன் சற்றும் எதிர்பாராத வகையில் ஏராளமான வெடிகுண்டுகளை நிரப்பிய சொகுசு காரை துணை ராணுவ வீரர்கள் சென்ற பஸ்களில் ஒன்றை குறிவைத்து வேகமாக மோதினான். அப்போது பலத்த சத்தத்தோடு குண்டுகள் வெடித்து சிதறின. அதில் அந்த பஸ் முற்றிலும் நாசமானது. அத்துடன் வந்த பல வாகனங்களும் சேதம் அடைந்தன.  இதில் துணை ராணுவ படையினர் 44 பேர் பலியாகி உள்ளனர்.



    இந்த தாக்குதலை பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிற மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு அவர்கள் பொறுப்பேற்றனர்.

    இந்நிலையில், தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட நபர் இன்று கைது செய்யப்பட்டார்.

    அவரது பெயர் உபேந்திரா பகதூர் சிங் (39).  இவர் ரெயில்வே துறையில் இளநிலை டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார்.

    இதுபற்றி மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, இன்று காலை லோனாவாலா பகுதியில் சிவாஜி சவுக் என்ற இடத்தில் உள்ளூர் குடியிருப்புவாசிகள் சிலர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்தனர்.

    அந்த இடத்திற்கு வந்த சிங் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷங்களை எழுப்பினார்.  இதனால் அங்கிருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து அவரை அடிக்க முற்பட்டனர்.

    ஆனால் அங்கு குவிக்கப்பட்டு இருந்த காவல் துறை அதிகாரிகள் அவரை உடனடியாக கைது செய்தனர்.  அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  அவருக்கு பிப்ரவரி 18ந்தேதி வரை போலீஸ் காவல் விதித்து உத்தரவிடப்பட்டு உள்ளது. #JammuKashmir #CRPF #RailwayEmployee
    புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களின் இறுதி யாத்திரையில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை சேர்ந்த மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க வேண்டுமென பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். #PulwamaAttack #CRPFjawans #Modilaywreath
    புதுடெல்லி:

    புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்களின் உடல்கள் இன்றிரவு விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்டன. பாலம் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ மந்திரி நிர்மலா சீதாரமன், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முப்படை தளபதிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    டெல்லியில் வைக்கப்பட்டுள்ள வீரர்களின் உடல்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படவுள்ளன.



    இதற்கிடையில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களின்  இறுதி யாத்திரையில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை சேர்ந்த மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க வேண்டுமென பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.  #PulwamaAttack #CRPFjawans #Modilaywreath
    புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்களின் உடல்கள் இன்றிரவு விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்டன. பாலம் விமான நிலையத்தில் ராகுல் காந்தி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். #CRPFsoldier #PulwamaAttack #RahulGandhi #Rahullaywreath #CRPFjawans
    புதுடெல்லி:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், நேற்றைய தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் பட்காம் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

    மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், காஷ்மீர் கவர்னர் சத்யபால் சிங் ஆகியோர் அங்கு சென்று வீரர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.  

    பின்னர் ராஜ்நாத் சிங், மத்திய பாதுகாப்பு படையின் ஜம்மு-காஷ்மீர் மாநில டி.ஜி.பி. தில்பாக் சிங் ஆகியோர் மரணம் அடைந்த வீரரின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியை தோளில் சுமந்தபடி நடந்துசென்று வாகனத்தில் ஏற்றி வைத்தனர்.


    அங்கிருந்து 40 வீரர்களின் உடல்களும் தனி விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டன. வீரர்களின் உடல்களை சுமந்து வந்த விமானம் இன்றிரவு சுமார் 8 மணியளவில் டெல்லியில் ராணுவத்துக்கு சொந்தமான பாலம் விமான நிலையத்தை வந்தடைந்தது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ராணுவ மந்திரி நிர்மலா சீதாரமன், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்,  மத்திய மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி தனோவா லே, கடற்படை தளபதி சுனில் லான்பா  உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.  #CRPFsoldier #PulwamaAttack #RahulGandhi  #Rahullaywreath #CRPFjawans
    பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறை மற்றும் பயங்கரவாதிகளிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர். அவர்களுக்கான பாதுகாப்பு விலக்கப்படும் என ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார். #PulwamaAttack #RajnathSingh #PakistanISI
    ஸ்ரீநகர்:

    மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தனிவிமானம் மூலம் இன்று பிற்பகல் ஜம்மு நகரை வந்தடைந்தார்.

    நேற்றைய தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் பட்காம் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் இறுதி மரியாதை செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தன.

    மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், காஷ்மீர் கவர்னர் சத்யபால் சிங் ஆகியோர் அங்கு சென்று வீரர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அப்போது அங்கு கூடியிருந்த வீரர்கள் ‘வீர் ஜவான் - அமர் ரஹே’ (உங்களது வீரமும் தியாகமும் அமரத்துவமாக வாழும்) என்று உணர்ச்சி பொங்க முழக்கமிட்டனர்.

    இறுதி மரியாதைக்கு பிறகு ராஜ்நாத் சிங், மத்திய பாதுகாப்பு படையின் ஜம்மு-காஷ்மீர் மாநில டி.ஜி.பி. தில்பாக் சிங் ஆகியோர் மரணம் அடைந்த வீரரின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியை தோளில் சுமந்தபடி நடந்துசென்று வாகனத்தில் ஏற்றி வைத்தனர்.

    புல்வாமா தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் வீரர்களை சந்தித்து ஆறுதல் கூறிய ராஜ்நாத் சிங், காஷ்மீர் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் மற்றும் புல்வாமா தாக்குதல் தொடர்பாக ராணுவ அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர், ஸ்ரீநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறை மற்றும் பயங்கரவாதிகளிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர். அவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை விலக்கிக் கொள்வது தொடர்பாக பரிசீலிக்குமாறு உயரதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.


    ’பாகிஸ்தான் அரசின் உளவுத்துறை மற்றும் அந்நாட்டின் பயங்கரவாதிகளுடன் ஜம்மு-காஷ்மீரில் உள்ள சில (பிரிவினைவாத) அமைப்பினருக்கு தொடர்பு உள்ளது. இவர்கள் பாகிஸ்தான் உளவுத்துறையிடம் இருந்து பணம்பெற்று வருகிறார்கள்.

    அவர்களுடன் கைகோர்த்துக் கொண்டு சதிவேலைகள் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு இவர்கள் திட்டமிட்டு தருகின்றனர். இதன் மூலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மக்களின் எதிர்காலத்துடன் விளையாடுகின்றனர்.

    இவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை விலக்கிக் கொள்வது தொடர்பாக பரிசீலிக்குமாறு உயரதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான தீர்க்கமான போரில் இந்தியா வெற்றிபெற்றே தீரும்.

    பாதுகாப்பு நடவடிக்கையாக இனி சில நாட்களுக்கு மட்டும் பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் செல்லும் சாலைகளில் வேறெந்த தனியார் வாகனங்களும் இடையில் செல்ல முடியாதவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நமது வீரர்களின் உயிர்களை பாதுகாப்பதற்காக எடுக்கப்படும் இந்த நடவடிக்கையால் ஏற்படும் அசவுகரியத்துக்காக பொதுமக்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்’ எனவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.  #PulwamaAttack #RajnathSingh #PakistanISI      
    புல்வாமா மாவட்டத்தில் 40 வீரர்களின் உயிரை பறித்த தாக்குதலை கண்டித்து பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஜம்முவின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. #CurfewinJammu #Pulwamaattack
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் நேற்று பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் உள்பட மத்திய துணை ராணுவப் படையை சேர்ந்த 40 பேர் உடல் சிதறி, உயிரிழந்தனர்.

    பாகிஸ்தானில் இயங்கிவரும் ஜெய்ஷ்-இ-முஹம்மத் என்ற பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள நிலையில் கொடூரமான இந்த  தாக்குதலை கண்டித்து ஜம்மு பகுதிக்கு உள்பட்ட பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ஜம்முவின் சில பகுதிகளில் ஊரடங்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறிப்பாக, ஜம்மு நகருக்கு உட்பட்ட ஜிவல் சவுக், புரானி மண்டி, ரேஹாரி, சக்திநகர், பக்கா டங்கா, ஜானிப்பூர், காந்திநகர், பக்‌ஷிநகர் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தானை கண்டித்து பஜ்ரங் தள், சிவசேனா கட்சியினரும் பொதுமக்களும் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


    குஜ்ஜார் நகர் பகுதியில் வாகனங்கள் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். சில இடங்களில் சாலைகளில் சிலர் டயர்களை எரித்து போக்குவரத்துக்கு இடையூறாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜம்மு நகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வாகன போக்குவரத்தின்றி பல சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

    ஜம்மு-காஷ்மீர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கோர்ட் நடவடிக்கைகளை புறக்கணித்துவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோல், தெலுங்கானா மாநில வழக்கறிஞர்கள் சங்கத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

    இந்நிலையில், ஜம்மு பகுதியில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் இரு சமுதாயத்தினருக்கு இடையிலான மோதலாக திசை திரும்பலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பதற்றமான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜம்மு போலீஸ் துணை கமிஷனர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

    சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் நடவடிக்கையில் ராணுவத்தின் உதவி கோரப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். #CurfewinJammu #Pulwamaattack
    பாகிஸ்தானில் உள்ள இந்தியாவுக்கான தலைமை தூதரை உடனடியாக டெல்லி வருமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. #PulwamaAttack #IndianHighCommissioner #AjayBisaria
    புதுடெல்லி:

    புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தலைமை தூதரை நேரில் வரவழைத்து  இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே இன்று பிற்பகல் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், நேற்றைய தாக்குதல் தொடர்பாக அவசர ஆலோசனை நடத்த பாகிஸ்தானில் உள்ள இந்தியாவுக்கான தலைமை தூதர் அஜய் பிசாரியா-வை உடனடியாக டெல்லி வருமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.



    புல்வாமா தாக்குதல் தொடர்பாக இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடம் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையிலான சில ஆதாரங்களை முன்வைத்து இந்த பிரச்சனையை மையப்படுத்தி இந்திய தூதரகத்தின் மூலம் பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கடி அளிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. #PulwamaAttack #IndianHighCommissioner #AjayBisaria 
    காஷ்மீர் மாநிலத்துக்கு இன்று பிற்பகல் வந்த மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் புல்வாமா தாக்குதலில் நேற்று மரணம் அடைந்த வீரரின் உடலை தோளில் சுமந்து சென்றார். #RajnathSingh #CRPFsoldier #PulwamaAttack
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படை வாகனத்தின்மீது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

    காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் மீது நேற்று நடந்த தற்கொலைப்படை தாக்குதல் குறித்து டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், நிதித்துறை மந்திரி அருண் ஜெட்லி ஆகியோர் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினர்.

    பின்னர்,  மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தனிவிமானம் மூலம் இன்று பிற்பகல் ஜம்மு நகரை வந்தடைந்தார்.

    நேற்றைய தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் பட்காம் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் இறுதி மரியாதை செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தன.



    அங்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், காஷ்மீர் கவர்னர் சத்யபால் சிங் ஆகியோர் அங்கு சென்று வீரர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அப்போது அங்கு கூடியிருந்த வீரர்கள் ‘வீர் ஜவான் - அமர் ரஹே’ (உங்களது வீரமும் தியாகமும் அமரத்துவமாக வாழும்) என்று உணர்ச்சி பொங்க முழக்கமிட்டனர்.

    பின்னர் ராஜ்நாத் சிங், மத்திய பாதுகாப்பு படையின் ஜம்மு-காஷ்மீர் மாநில டி.ஜி.பி. தில்பாக் சிங் ஆகியோர் மரணம் அடைந்த வீரரின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியை தோளில் சுமந்தபடி நடந்துசென்று வாகனத்தில் ஏற்றி வைத்தனர். #RajnathSingh #Rajnathlendshoulder #CRPFsoldier #PulwamaAttack
    காஷ்மீர் மாநிலத்தில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் இருவரின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். #PulwamaAttack
    சென்னை:

    காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படை வாகனத்தின்மீது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

    கடமையின்போது வீரமரணம் அடைந்த அவர்களில் இருவர் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் சவலப்பேரி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன், மற்றொருவர் அரியலூர் மாவட்டம் கார்குடி பகுதியை சேர்ந்த சிவச்சந்திரன் என்பது இன்று தெரியவந்துள்ளது.


    இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் இருவரின் குடும்பங்களுக்கும் தலா 20 லட்சம் ரூபாய் கருணைத்தொகையாக அளிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #PulwamaAttack #TNCM #Rs20lakhsolatium #CRPFpersonnel  
    பயங்கரவாதிகளுக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு அளிக்கும் என்று அதன் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #PulwamaAttack #CRPF #RahulGandhi
    புதுடெல்லி:

    காஷ்மீரில் துணை ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காஷ்மீரில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட இந்த சம்பவம் வெறுக்கத்தக்கது. இத்தகைய நடவடிக்கையால் இந்தியாவை எந்த சக்தியாலும் பிளவுபடுத்த முடியாது.



    பயங்கரவா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு நாடு துணை நிற்கும். பயங்கரவாதிகளுக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு அளிக்கும்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

    அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உடன் இருந்தார். #PulwamaAttack #CRPF #RahulGandhi
    காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதல் குறித்து டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. #PMModi #CRPF #PulwamaAttack
    புதுடெல்லி:

    காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதையடுத்து இன்று டெல்லியில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்த மந்திரி சபையை கூட்டினார்.

    அதன்படி காலையில் மோடி தலைமையில் மந்திரிசபை அவசர ஆலோசனை நடத்த கூடியது. இதில் மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன், சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


    நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. காஷ்மீரில் உள்ள நிலைமை குறித்தும் அங்கு எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    மேலும் தற்கொலை தாக்குதலுக்கு எப்படிப்பட்ட பதிலடி கொடுப்பது என்றும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

    காஷ்மீர் தாக்குதலையடுத்து பா.ஜனதா தலைவர்களின் அனைத்து நிகழ்ச்சிகளும் இன்று ரத்து செய்யப்பட்டன. #PMModi #CRPF #PulwamaAttack 
    ×